;
Athirady Tamil News

வீதியில் சென்றவர்கள் மீது போதையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது!!

0

மதுபோதையில் வீதியால் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் இளவாலை சென்யூட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுபோதையில் நின்ற இளைஞர் குழு ஒன்று வீதியால் சென்றவர்களுடன் தர்க்கம் புரிந்து தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கும்பலின் தாக்குதலில் காயமடைந்த 4 பேர் தெல்லிப்பழை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிஸார் மாரீசன் கூடல் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.