;
Athirady Tamil News

அடுத்த வாரமும் தினசரி மின்வெட்டு தொடரும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.!! (படங்கள்)

0

நாளை (25) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை தினமும் நான்கு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி, ஏ முதல் எல் வரை மற்றும் பி முதல் டபிள்யூ வரை வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை மூன்று மணி நேர மின்வெட்டு விதிக்கப்படும்.

இதற்கிடையில், ஏ முதல் எல் வரை மற்றும் பி முதல் டபிள்யூ வரையிலான வலயங்களுக்கு தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், எரிபொருள் தட்டுப்பாடு, நீர் சேமிப்பு மற்றும் மின்பிறப்பாக்கிகள் கிடைக்காமை போன்ற காரணங்களால் தேவை முகாமை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தினமும் காலை 6 மணி முதல் 9.20 மணி வரை சிசி பகுதியில் மூன்று மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.