;
Athirady Tamil News

இலங்கை விமானங்களுக்கு இந்திய எரிபொருள் !!

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையை அடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு இந்திய அரசுக்கு சொந்தமான, பாரத் பெற்றோலியம் நிறுவனம் எரிபொருள் நிரப்புவதற்காக தெரிவித்துள்ளது.

பாரத் பெற்றோலியமும் தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அதற்கமைய இலங்கையின் சுமார் 100 விமானங்களுக்கு இதுவரை, திருவனந்தபுரம், சென்னை மற்றும் கொச்சி விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.

கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக, மிகக் குறுகிய அறிவிப்பில், இந்த எரிபொருள் நிரப்புதல் செய்யப்பட்டுள்ளது என்று பாரத் பெற்றோலியம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் இந்த சேவைக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.