;
Athirady Tamil News

ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுலாகும் விதம்!!

0

நாடளாவிய ரீதியில் ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L மற்றும் P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், CC வலயங்களில், காலை 6 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணிமுதல் காலை 8.30 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு இடம்பெறுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.