;
Athirady Tamil News

தாயை உலக்கையால் அடித்து கொன்ற மகள் கைது !!

0

தாயொருவரை உலக்கையால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பொரலை பகுதியில் பதிவாகியுள்ளது.

பொரலை பேஸ்லைன் வீதியிலுள்ள சிங்கபுர குடியிருப்பில் வசித்து வந்த மொஹமட் ஜெஸ்மின் என்ற 65 வயதான தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் 38 வயதான மகள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 3 அடி உயரமான உலக்கையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண்ணின் 6 வயது மகளை தனது தாய் தாக்கியதையடுத்து, கோபம் கொண்ட மகள் தாயின் தலையில் உலக்கையால் தாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் காயமடைந்த அப்பெண், வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட பெண், அங்கொடை மனநல காப்பகத்தில் சிகிச்சைப் பெற்று சில தினங்களுக்கு முன்பே வீடு திரும்பியவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.