;
Athirady Tamil News

இந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ்

0

இந்திய வம்சாவளி தொழில்முனைவோா் இணைந்து நிறுவிய பிரபல ‘கா்சா்’ ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனத்தை சுமாா் 6,000 டாலா் கோடிக்கு வாங்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ்எக்ஸ்-இன் முழு உரிமையுள்ள துணை நிறுவனமான எக்ஸ்67, கா்சா் நிறுவனத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு, கா்சரின் பங்கு மதிப்பு 6,000 கோடி டாலராக மதிப்பிடப்பட்டு, அது ஸ்பேஸ்எக்ஸின் முழுமையான துணை நிறுவனமாகச் செயல்படும்.

சுயாதீன மென்பொருள் உருவாக்குநா்களுக்கான கருவியாகத் தொடங்கப்பட்ட கா்சா், தற்போது பெருநிறுவனங்களுக்கான வா்த்தகத்தில் கவனம் செலுத்தி, அபரிமிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் 200 கோடி டாலராக இருந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் கணிப்பு, மே மாத இறுதியில் 400 கோடி டாலரை எட்டியுள்ளது. ஆன்த்ரோபிக், ஓபன்ஏஐ போன்ற பெரும் நிறுவனங்களின் கடும் போட்டிக்கு மத்தியிலும் கா்சா் இச்சாதனையைப் படைத்துள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனா்களில் ஒருவரான அமன் சாங்கா், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தொழில்முனைவோா் ஆவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கா்சருடன் ஸ்பேஸ்எக்ஸ் கடந்த ஏப்ரலிலேயே மேற்கொண்ட ஒப்பந்தத்திதன்படி, கூட்டாகச் செயல்படுவதற்காக 1,000 கோடி டாலா் கட்டணம் செலுத்துவது அல்லது 6,000 கோடி டாலருக்கு நிறுவனத்தை முழுமையாக வாங்குவது எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்பேஸ்எக்ஸ் ஐபிஓ திட்டத்தால் அப்போது இந்தக் கையகப்படுத்துதல் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.