;
Athirady Tamil News

திருகோணமலை கந்தளாய் 521 பகுதியில் லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது!!

0

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 521 லீற்றர் டீசலை லொறியொன்றில் கொண்டு சென்ற ஒருவரை கந்தளாயில் வைத்து கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் தெரிவித்தார்.

இன்று (21) மாலை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சட்டவிரோதமான முறையில் கந்தளாய் பிரதேசத்தில் எண்ணூற்றி ஐம்பது ரூபாவுக்கு வாங்கி தம்புள்ளை பகுதிக்கு கூடுதலான விலைக்கு விற்பதற்காக சிறிய லொறியொன்றில் கொண்டு சென்ற போதே கந்தளாய் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் டீசலை கொண்டு செல்வதற்காக பயன்படுத்திய லொறி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.