;
Athirady Tamil News

சீனாவில் 70 நகரங்களுக்கு அதீத வெப்ப எச்சரிக்கை – வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தாண்டும் அபாயம்..!!

0

உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை காணாத வெப்பம் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற நகரங்கள் இத்தகைய வெப்ப அலையை சந்திப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் சீனாவில் கடந்த ஜூனில் இருந்து கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகிறது. ஏற்கனவே சீனாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வருகிற 26ந்தேதி வரை கடுமையான வெப்பம் நிலவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31ந்தேதி முதல் ஆகஸ்டு 15ந்தேதி வரை முந்தின ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 70 நகரங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கையை சீனா விடுத்துள்ளது. இந்த நகரங்களில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 393 சீன நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் வெப்பநிலை இருக்கும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படக்கூடும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக உலகளாவிய வெப்பநிலை இன்னும் தீவிரமாக கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.