;
Athirady Tamil News

பாலினத்திற்கு எதிரான வன்முறைகளை கண்டித்து பேரணி!! (படங்கள்)

0

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேரணி ஒன்று இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பேரணி பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுடாக சென்று விஞ்ஞான பீட நுழைவாயிலுடாக பல்கலைக்கழகத்திற்குள் சென்று நிறைவடைந்தது.

பேரணியில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

பேரணியின் நிறைவில் மாற்றுப்பாலின சமூகத்தினர் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆற்றுகையொன்றும் இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.