;
Athirady Tamil News

பொதுப்பணித்துறை துணை மண்டல அலுவலகம், தங்கவயலுக்கு மாற்றம்: மாநில முதன்மை செயலாளர் உத்தரவு..!!

0

கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர், கர்நாடக மாநில முதன்மை செயலாளர் ருத்ரய்யாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பல்வேறு கோரிக்கைளை வைத்தார். அப்போது ரூபா கலா சசிதா் எம்.எல்.ஏ., கோலார் தங்கவயலில் புதிதாக தொடங்க உள்ள பொதுப்பணித்துறை துணை மண்டல அலுவலகத்தை நகரசபை அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், கர்நாடக மாநில பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ருத்ரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோலார் தங்கவயல் தாலுகாவில் பொதுப்பணித்துறை துணை மண்டல அலுவலகத்தை தொடங்க சம்மந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மைசூருவில் இயங்கி வரும் சிறப்பு பொதுப்பணித்துறை துணை மண்டல அலுவலகம், கோலார் தங்கவயலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் உதவி செயல் என்ஜினீயர் ஒருவர், முதன்மை என்ஜினீயா்கள் 4 பேர், முதன்மை செயல் அதிகாரி ஒருவர், உதவி செயல் அதிகாரிகள் 2 பேர், அலுவலக உதவியாளர்கள் 2 பேர் என்று மொத்தம் 14 பேர் கோலார் தங்கவயல் தாலுகா பொதுப்பணித்துறை துணை மண்டல அலுவலகத்திற்கு நியமிக்கப்படுவார்கள். நகரசபை அலவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் துணை மண்டல அலவலகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.