உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை அதிகரிப்பு – ராஜ்நாத் சிங்..!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/07/1738033-rajnath.png)
பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆக உள்ளது. இந்நிலையில், ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த உதவித்தொகை தற்போது ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் இந்தத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் பல முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என பதிவிட்டுள்ளார்.