;
Athirady Tamil News

சாய்ந்தமருது மியன்டாட் இளையோர் அணியை வீழ்த்தி சன்பிளவர் இளையோர் அணி அபார வெற்றி!!

0

சாய்ந்தமருது மியன்டாட் இளையோர் அணியின் புதிய சீருடை அறிமுக கண்காட்சி கிரிக்கெட் போட்டி சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்றது. இதில் சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டு கழக இளையோர் அணி போட்டியினை ஏற்பாடு செய்த சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டு கழக இளையோர் அணியினரை 6 விக்கெட்டுகளினால் வீழ்த்தி மிகவும் அபாரமான முறையில் வெற்றியீட்டி சம்பியன் கிண்ணத்திணையும் கைப்பற்றியது.

நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது மியன்டாட் இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததற்கு அமைய முதலில் துருப்பெடுத்தாடிய சாய்ந்தமருது மியண்டாட் இளையோர் அணியினர் 18 பந்துவீச்சு ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றனர் இதில் அணித்தலைவர் ஹப்னான் 32 மற்றும் தஸ்னீம் 24 என ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் அல்ஷாத் 02 விக்கட்டுக்களையும்,சிஸான் மற்றும் சபீர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தி இருந்தனர்.

130 ஓட்டங்கள் வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய சன்பிளவர் இளையோர் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 13.5 ஓவர்களில் 130 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான முறையில் அபார வெற்றியினைப் பெற்று கொண்டது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் என்.எம்.சபீர் ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 78 ஓட்டங்களையும் றிப்தாத் 12 பந்துகளில் 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக சன்பிளவர் இளையோர் அணியின் தலைவர் என்.எம்.சபீர் தெரிவாகியதுடன் மியன்டாட் இளையோர் அணியின் சீருடை அறிமுக வெற்றிக் கிண்ணத்தினை சன்பிளவர் இளையோர் அணி கைப்பற்றியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.