;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு 2-வது நாளாக உயர்வு: இந்தியாவில் 2,786 பேருக்கு கொரோனா..!!

0

இந்தியாவில் புதிதாக 2,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 1,957 ஆக இருந்தது. நேற்று 2,139 ஆக உயர்ந்த நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 21 ஆயிரத்து 319 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,557 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரத்து 963 ஆக உயர்ந்தது. தற்போது 26,509 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 6 மரணங்கள் உள்பட மேலும் 12 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,847 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.