;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1588254.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

மின்வெட்டு நேரம் குறித்த அறிவிப்பு !!

0

களனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் மூடப்பட்டுள்ளமை காரணமாக மின்வெட்டு நேரம் நீடிக்கப்படமாட்டாது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக பண்டார தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் தேசிய மின்கட்டமைப்பை பராமரிக்கத் தேவையான மின் உற்பத்தி காணப்படுவதாகத் தெரிவித்த அவர், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 300 மெகாவொட் திறன் கொண்ட மின் உற்பத்தி அலகு தேசிய மின்கட்டமைப்புடன் விரைவில் இணைக்கப்படும் என்றார்.

புதிய நாப்தா (எரிபொருள்) விநியோகிக்கப்படாமையால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம், சனிக்கிழமை (03) நள்ளிரவு மூடப்பட்டது.

4000 மெற்றிக்தொன் நப்தா மூலம் 165 மெகாவோட் மின்சாரம் நாளாந்தம் உற்பத்தி செய்த குறித்த மின் நிலையம், சனிக்கிழமை இரவுக்குள் நப்தா கிடைக்கவில்லை எனின், மின்நிலையம் மூடப்படும் என்றும் மின்சாரசபையின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான அன்ட்ரூ நவமணி, சனிக்கிழமை பிற்பகல் குறிப்பிட்டிருந்தார்.

மின்நிலையத்தை மூடும் பட்சத்தில் மின்வெட்டை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் நிலைமையை பரிசீலித்து, மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டுமா என்பதை ஆராயவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே மின் வெட்டு நேரம் நீட்டிக்கப்படமாட்டாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.