;
Athirady Tamil News

வாக்களிக்க ஊர்வலமாக சென்றார் பிரதமர் மோடியின் செயல், தேர்தல் விதிமீறல் காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

0

பிரதமர் மோடி நேற்று குஜராத்தில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு ஊர்வமாக சென்றார். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா அளித்த பேட்டி வருமாறு:- குஜராத் தேர்தலில் ஓட்டளிக்க ஆமதாபாத் சென்ற பிரதமர் ேமாடி, ஊர்வலமாக சென்றுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல். அவரது 2½ மணி நேர ஊர்வலமும் அனைத்து சேனல்களாலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். கடந்த பல வாரங்களாக தேர்தல் கமிஷன் முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது. மவுனமாக வேடிக்கை பார்த்து வருகிறது. நிர்பந்தத்தின் கீழ் இயங்கி வருவதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.