;
Athirady Tamil News

வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் ஆயுதங்களுடன் கைது!

0

யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர், வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள் வாள்கள் மற்றும் , கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் , அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களையும் மேலதிக நடவடிக்கைக்காக மானிப்பாய் பொலிசாரிடம் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் கையளித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.