;
Athirady Tamil News

இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவித்த பாகிஸ்தான் டி.வி.க்கு தடை விதித்தது மத்திய அரசு..!!

0

இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பல்வேறு செயலிகளை மத்திய அரசு தடை செய்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஓடிடி தளமான வீட்லி டிவிக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து, அதன் இணையதளம், இரண்டு மொபைல் அப்ளிகேஷன்கள், நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஒரு ஸ்மார்ட் டிவி ஆப் ஆகியவை முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விட்லி டிவியில் வெளியான இணையத் தொடர் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் ஆபத்தானதாகக் கருதப்பட்ட நிலையில் மத்திய அரசு அந்த டிவிக்கு தடை விதித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.