;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 152 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

0

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 152 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 114 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 75 ஆயிரத்து 247 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 151 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,846 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,658 ஆக நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.