;
Athirady Tamil News

டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு- ஆஸ்பத்திரியில் சிகிச்சை..!!

0

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட்டை வீசி இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவி மீது ஆசிட் வீசுவது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. அதை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆசிட் வீச்சுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.