;
Athirady Tamil News

சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!!

0

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு மோதின. இந்த போட்டியில் 90 நிமிடங்கள் ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. அதன்பின், பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தப் போட்டி மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக நினைவுகூரப்படும். உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவுக்கு வாழ்த்துகள்! இந்த கால்பந்து தொடர் முழுவதும் அவர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்கள் இந்த அற்புதமான வெற்றியில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்! என பதிவிட்டுள்ளார். மேலும் அவர், உலக கோப்பை கால்பந்து போட்டியில் உற்சாகமான செயல்திறனுக்காக பிரான்சுக்கு வாழ்த்துகள்! அவர்கள் இறுதிப் போட்டியில் தங்கள் திறன் மற்றும் விளையாட்டுத் திறமையால் கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்தனர் என பிரான்சு அணிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல், உலக கோப்பை வென்ற அர்ஜென் டினா அணிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்பொதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.