;
Athirady Tamil News

இங்கிலாந்து நபரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு!!

0

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த ஆண் நபரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலையில் உள்ள விகாரை ஒன்றில் குளத்தை பார்வையிடச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் ஹங்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 69 வயதுடையவராவார்.

இங்கிலாந்தில் லண்டனைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.