;
Athirady Tamil News

பலவந்தமாக நஞ்சூட்டப்பட்ட நிலையில் இளம் பிக்கு வைத்தியசாலையில் !!

0

கண்டி ஹிந்தகல ரஜமஹா விகாரையில் மல்வத்து மகா விகாரையைச் சேர்ந்த 17 வயதுடைய இளம் தேரர் ஒருவர் பலவந்தமாக நஞ்சூட்டப்பட்டு அதிகளவான பரசிட்டமோல் மாத்திரைகளை விழுங்கியதால் ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (18) காலை 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விகாரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் குறித்த நபர் சந்தேகிக்கப்படுவதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.