;
Athirady Tamil News

வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பை பெற நடவடிக்கை!

0

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக மத்திய இணைப்பு மத்திய நிலையம் ஒன்றாக செயல்படக்கூடிய வகையில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள 3 மில்லியன் இலங்கையர்களின் பங்களிப்பை நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்காக பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இந்த அலுவலகம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் வருமாறு:

புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை நிறுவுதல்

புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்காக மத்திய ஒருங்கிணைப்பு நிலையமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனை மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, வெளிநாடுகளில் வாழ்கின்ற 03 மில்லியன் இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களை எமது நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் ´புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை´ ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவுவதற்கும், குறித்த அலுவலகத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குமுறையாக மேற்கொண்டு செல்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிவிகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.