;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 185 பேருக்கு கொரோனா..!!

0

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 185 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்று பாதிப்பு 131 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 515 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 190 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 432 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,402 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் நேற்று டெல்லியில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,681 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.