;
Athirady Tamil News

நீதிமன்றத்திற்கு தீ வைப்பு – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை !!

0

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளதுடன் குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நீதிமன்ற கட்டிடத் தொகுதி சம்பவ தினமான நேற்று (21) அதிகாலை 3 மணியளில் கட்டிடம் தீ பற்றியதையடுத்து பொலிஸார் மற்றும் தீயணைக்கும் படையுனர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

இருந்தபோதும் கட்டிடத்திலுள்ள வழக்கு பதிவேட்டு அறை மற்றும் திறந்த நீதிமன்றம் உட்பட பல பரிவுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவியில் 3 பேர் முகத்தை மூடியவாறு நீதிமன்ற வளாகத்தில் உள்நுழைந்து கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடும் காட்சி பதிவாகியுள்ளது .

இது தொடர்பாக விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்த நபர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடன் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.