;
Athirady Tamil News

கொரோனா அச்சுறுத்தல்: பாராளுமன்ற உறுப்பினர்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தல்..!!

0

சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரும்படி மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டுள்ளார். மாநிலங்களவை இன்று கூடியதும், பிற நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், உறுப்பினர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டியது நமது கடமை என்றும் அவர் வலியுறுத்தினார். நிர்வாகம், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் கூட்டு முயற்சியால், கடந்த காலங்களில் கொரோனாவின் தாக்கத்தை இந்தியா சமாளித்தது என்றும் அவைத்தலைவர் குறிப்பிட்டார். இதேபோல் மக்களவையிலும் உறுப்பினர்கள் மாஸ்க் அணியவேண்டும் என அவைத்தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். பாராளுமன்ற இரு அவைகளிலும் இன்று பெரும்பாலான உறுப்பினர்கள் முக கவசம் அணிந்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.