;
Athirady Tamil News

பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது..!!

0

பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் செக்டாரில் உள்ள புல்மோரன் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு டிரோன் ஒன்று இன்று காலை நுழைந்தது. இதை கண்காணித்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அந்த டிரோன் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதிலிருந்து ஆயுதம் மற்றும் போதை பொருள் ஏதாவது கீழே இறக்கப்பட்டதா என்பதை கண்டறிய அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.