;
Athirady Tamil News

திடீரென மூடப்பட்ட வைத்தியசாலையின் மருந்து வழங்கும் பகுதிகள் – சிரமத்திற்குள்ளான நோயாளிகள் !!

0

மஹரகம அபேகஸா வைத்தியசாலையில் சிகிச்சைப் பிரிவினருக்கு மருந்து வழங்கும் பகுதிகள் இன்று (23) திடீரென மூடப்பட்டமையால் புற்று நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மதியம் 1.00 மணியளவில் திடீரென மூடப்பட்ட குறித்த பகுதிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சுமார் 3.30 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டன.

அங்கு காணப்படும் ஐந்து பகுதிகளில் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டது எனவும் அதன் பிறகு மற்றொரு பகுதி திறக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக வரிசையில் நின்றிருந்த நோயுற்ற சிறுவர்கள் உட்பட பலர் அழுத்தத்தை தாங்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகியதாகவும், தொலைதூர பகுதிகளில் இருந்து மருத்துவ மனைக்கு வருகை தந்த சில நோயாளிகள் காலை மற்றும் மதிய உணவுகள் இல்லாதது பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாகவும் நோயாளர்கள் தெரிவித்தனர்.

அந்த வரிசையில் இருந்தவர்களில் சிலர் பதுளை, மொனராகலை, யாழ்ப்பாணம் போன்ற தொலைதூரப் பிரதேசங்களில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறிய நோயாளிகள் சிலர், இன்று அதிகாலை மருத்துவமனைக்கு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.