;
Athirady Tamil News

ஐரோப்பிய நாடுகளில் இருந்து போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த பொதிகள்!

0

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்ததாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

7 பொதிகள் இவ்வாறு சோதனை இடப்பட்டுள்ளதுடன், அதில் இருந்து குஷ் எனப்படும் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

தபால் மூலம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட பொம்மைகள் கொண்ட பொதிகள் மற்றும் உணவுகள் அடங்கிய ரின்களில் குறித்த போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த போதைப்பொருட்களின் பெறுமதி 16 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

7 பொதிகளில் 4,673 கிராம் குஷ் எனப்படும் போதைப்பொருள் மற்றும் 9,586 மாத்திரைகள் இருந்ததாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போதைப்பொருட்கள் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.