;
Athirady Tamil News

போதைப்பொருள் விருந்து; நான்கு வாடகை அழகிகளுடன் ஐவர் கைது!!

0

போதைபொருள் விருந்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் சேர்த்து பணம் செலுத்தி அழைத்து வந்த நான்கு அழகிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு குற்ற விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொரலஸ்கமுவ பெப்பிலியான பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொரலஸ்கமுவ பெப்பிலியான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுவரும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வாடகை அழகிகள் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணி புரிபவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்கள் கொழும்பில் தூரப்பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பணம் செலுத்தி அழைத்து வரப்பட்டுள்ளார்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவரின் மகன்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களிடம் இருந்து 600 மில்லிகிராம் ஹெஷ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.