;
Athirady Tamil News

அறுக்கப்பட்ட பெண் உப பொலிஸ் பரிசோதகரின் தங்கச்சங்கிலி!

0

பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் கம்பஹா மாவட்டம் கிரிந்திவெல காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா மாவட்டம் கிரிந்திவெல பொபிலியவல-ரதாவான வீதியில் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொதே பெண் உப பொலிஸ் பரிசோதகர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் உப பொலிஸ் பரிசோதகர் பகுதி நேர வகுப்பு முடிந்த தனது மகளை ஏற்றிக்கொண்டு வீடு திரும்பிய நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அறுக்கப்பட்ட தங்கச்சங்கிலி 75000 ரூபா பெறுமதியானது என கிரிந்திவெல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிரிந்திவெல காவல் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.