;
Athirady Tamil News

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஓட்டுக்கு ரூ.10,000 கொடுக்க திட்டம்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..!!

0

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சாலை பேரணி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் பொண்டுரு மற்றும் விஜியாநகரம் வாசிம் ஆகிய இடங்களில் நடந்த பொதுக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:- ஆந்திராவில் வரிச்சுமையை அதிகரித்து மக்களை ஜெகன் மோகன் கொள்ளையடிக்கிறார். ஆந்திரா முழுவதையும் ஜெகன் அழித்து விடுவார். அடுத்த தேர்தலில் ஜெகனை வங்கக்கடலில் துாக்கி வீச ஆந்திர மக்கள் தயாராக இருக்கின்றனர். கொள்ளை அடித்த பணத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கொடுக்க ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளார். அந்த பணத்தை மக்கள் வாங்கினால், அவர்களுக்கு அவர்களே பள்ளம் தோண்டிக்கொள்வதாக அர்த்தமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.