;
Athirady Tamil News

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று தெலுங்கானா மாநிலத்திற்கு பயணம்..!!

0

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் வரும் 30ந் தேதிவரை தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலுக்கு இன்று செல்லும் குடியரசு தலைவர், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மேம்பாடு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்குள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரத்தையும் பார்வையிடுவார். 27ந்தேதி ஐதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமிக்கு சென்று பயிற்சியாளர்கள் மத்தியில் உரையாற்றுவார். மேலும் மிஸ்ரா தாது நிகாம் நிறுவனத்தின் வைட் பிளேட் மில்லையும் அவர் திறந்து வைக்கிறார். 28ந்தேதி அன்று, பத்ராசலம் சீத்தாராம சந்திர சுவாமிவாரி தேவஸ்தானத்திற்குச் சென்று பிரசாத வழங்கும் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மேலும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும் அவர் திறந்து வைக்கிறார். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ராமப்பா கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர், புனரமைப்புக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.