;
Athirady Tamil News

உச்ச நீதிமன்றம் அருகே டாக்ஸி தீப்பிடித்ததால் பரபரப்பு..!!

0

டெல்லியில் ஐடிஓ கிராசிங்கில் உச்சநீதிமன்றம் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த டாக்ஸி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 8.55 மணியளவில் கார் தீப்பிடித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு சுமார் 25 நிமிடங்களில் காரில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் சேதமில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அனைவரும் அலுவலகம் செல்லும் பரபரப்பான நேரத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.