;
Athirady Tamil News

இந்தியாவில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் 200-க்கும் கீழ் குறைந்த கொரேனா பாதிப்பு..!!

0

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 23-ந்தேதி பாதிப்பு 163 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 201 ஆகவும், நேற்று 227 ஆகவும் உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் 200-க்கும் கீழ் குறைந்தது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 77 ஆயிரத்து 302 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 190 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 179 ஆக உயர்ந்தது. தற்போது 3,428 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் புதிதாக எந்த உயிரிழப்புகளும் இல்லை. கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,695 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.