;
Athirady Tamil News

யாழ் – காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!

0

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகம், உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 23ஆம் திகதியிடப்பட்டு, இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறைக்கும், புதுச்சேரிக்கும் இடையில் ஜனவரி மாதம், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.