;
Athirady Tamil News

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு !!

0

அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பிற்காக குறைந்தது இரண்டு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களாவது ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கடவத்தை பொலிஸாருக்கும், கொம்பனித்தெரு பொலிஸாருக்கும் இருவேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களான கே.பி.பி. பத்திரன மற்றும் எஸ்.பி. திவாரத்ன ஆகியோர் ஆணைக்குழுவில் இருந்து விலகாவிட்டால் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.