நீர்கொழும்பு சிறையில் வன்முறை; உயிரிழப்பு அதிகரிப்பு
நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.