;
Athirady Tamil News

நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்; உயிரிழந்த 7 சிறை அதிகாரிகள் இவர்கள்தான்!

0

இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழந்த 7 அதிகாரிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுவிற்கும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான கலவரம்
நேற்று முன் தினம் , மற்றும் நேற்றையதினம் இடம்பெற்ற மோதலில் 100 இற்கும் மேற்படோர் காயமடைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதியமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறை , இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம் இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.