;
Athirady Tamil News

சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் பதில் – இலங்கை நம்பிக்கை!!

0

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் பதிலை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கையின் திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரட்ணாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் நிதி உத்தரவாதத்தினை பெற முடியும் என கருதுகின்றது இதன் மூலம் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 மில்லியன்; டொலர் கடனுதவியை பெறுவது சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன என திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரட்ணாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவாதம் கிடைத்ததும் இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.