;
Athirady Tamil News

அமெரிக்காவில் மீண்டும் துணிகரம் – பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழப்பு!!

0

அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த போலீசார் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் பள்ளிக்கு விரைந்தனர். அங்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர்களில் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொருவர் அந்த பள்ளியில் வேலை செய்யும் ஊழியராவார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.