;
Athirady Tamil News

சுதந்திர தினத்துக்கு முன்னர் 108 ஏக்கர் காணி விடுவிப்பு : அளவீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய தைப்பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்தபோது யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள 108 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பான முன்னேற்றங்களை ஆராய்வதற்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழாம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள 108 ஏக்கரில் பலாலி அன்ரனிபுரத்திலுள்ள 13 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் பணி நிலஅளவைத் திணைக்களத்தால் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.