;
Athirady Tamil News

லொறியின் கீழ்ப் பகுதியில் இரகசியப் பெட்டியமைத்து வெடிபொருட்கள் கடத்தல்!!

0

பிங்கிரிய, விலத்தவ பொலிஸ் வீதித்தடையில் கைப்பற்றப்பட்ட அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் கூடியதான லொறி தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோரே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

சிறிய லொறி ஒன்றின் கீழ் இரகசியமாகப் பெட்டி ஒன்றை அமைத்து அதற்குள் டெட்டனேட்டர்கள் மற்றும் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்ற நிலையில் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவர் பிங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் வெடிபொருட்களும் குறித்த இரகசிய பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.