;
Athirady Tamil News

அச்சுறுத்திய விவகாரம்; இருவர் பிணையில் விடுவிப்பு !!

0

ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (26) ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 23ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து சந்தேக நபர்களை கைதுசெய்திருந்தனர்.

மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க இன்று அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஆனந்த பாலித இணையவழி ஊடாக நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.