;
Athirady Tamil News

Zoom தொழில்நுட்பம் ஊடாக நீர்கொழும்பு கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள்

0

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் தேவைக்கேற்ப ‘சூம்’ (Zoom) தொழில்நுட்பம் ஊடாக இணையவழியில் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற விசாரணைகளை சூம்’ (Zoom) இணையவழியில் நடத்துவதற்கு உரிய நீதிமன்றங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றங்களின் உத்தரவுக்கமைய செயற்பட எதிர்பார்ப்பதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

29 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 29 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து பல கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், அவர்களின் வழக்கு விசாரணைகளுக்காக அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன

. மேலும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்னும் சுமார் 600 கைதிகள் இருப்பதாகவும், அவர்களும் விரைவில் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.