;
Athirady Tamil News

பிரான்ஸில் பணி புரிவோருக்கு மகிழ்ச்சி தகவல் – நடைமுறையாகவுள்ள புதிய திட்டம் !!

0

பிரான்ஸில் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்த அதிகளவான நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸில் மூன்று ஊழியர்களில் ஒருவர் நான்கு நாள் வேலை வாரத்திற்கு அதிகம் ஆர்வம் காட்டுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நான்கு நாள் வேலை வாரத்தைப் பெறுவதற்காக தங்கள் சம்பளத்தில் 5 சதவீதம் வரை தியாகம் செய்ய விரும்புவதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

அதிக ஓய்வு நேரத்தைப் பெறுவதற்கும், வேலை செய்வதற்கு குறைந்த நேரத்தை ஒதுக்குவதற்கும் விரும்புவதை காண முடிவதாக தெரியவந்துள்ளது.

பிரான்ஸில் 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே இதை ஏற்றுக்கொண்டிருப்பதால், சுகாதார நெருக்கடிக்குப் பிறகு இந்த புதிய வேலை திட்ட சோதனைகளை பல மடங்கு அதிகரித்துள்ளன.

கொரோனா தொற்றுநோய் பல ஊழியர்களுக்கு வேலை பற்றிய எண்ணத்தையும் கருத்தையும் மாற்றியுள்ளது.

வீட்டில் இருந்த வேலை செய்யும் நடைமுறையும் குறைந்த நாட்கள் வேலை செய்வதனையுமே மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

அதற்கமைய, நான்கு நாள் வாரமும் ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது, குறிப்பாக ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அதிக ஓய்வு நேரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகியுள்ளது.

ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அதே சம்பளத்தைத் தக்க வைத்துக் கொண்டு 5 நாட்களுக்குப் பதிலாக வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் வாய்ப்பை பெறும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.