;
Athirady Tamil News

பொது சிவில் சட்டம்.. இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: மாநிலங்களவையில் கிரண் ரிஜிஜு தகவல்!!

0

நாடு முழுவதும் கிரிமினல் குற்றங்களுக்கு மட்டுமே ஒரே விதமான சட்டம் இருக்கிறது. சிவில் என்று சொல்லப்படக்கூடிய திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்று ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினர் கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

பொது சிவில் சட்டத்துக்கான சாத்தியக் கூறுகள் குறித்து 21வது சட்ட ஆணையம் ஆராய்ந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் பதில் அளித்துள்ளார்.

பொது சிவில் சட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குமாறு 21வது சட்ட ஆணையத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. 21வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று முடிவடைந்துவிட்டது. சட்ட ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, பொது சிவில் சட்டம் தொடர்பான விஷயத்தை 22வது சட்ட ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்’ என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.