;
Athirady Tamil News

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

0

வாலாஜா அடுத்த அனந்தலை கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது மகள் சந்தியா (வயது 26). இவரது கணவர் ஸ்ரீதர் ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் வீடு திரும்பிய ஸ்ரீதருக்கும், சந்தியாவிற் கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சந்தியா. படுக்கை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.