;
Athirady Tamil News

துருக்கி நில அதிர்வு -பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்பு !!

0

துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி அந்நாட்டு தேசிய கால்பந்து அணியின் பிரபல வீரர் ஒருவர் பரிதாபமாக பலியான தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி தேசிய கால்பந்து அணியின் கோல்கீப்பராக செயல்பட்டு வந்த 28 வயதான அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான். 6ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மாயமானதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் தனியார் கால்பந்து அணியான Yeni Matalyaspor உறுதி செய்துள்ளது.

தங்கள் அணியின் கோல்கீப்பரை இழந்துள்ளதாகவும், இயற்கை பேரிடரில் சிக்கி அருமையான ஒரு நபரை இழந்துள்ளோம் எனவும் Yeni Matalyaspor அணி நிர்வாகம் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் மறைவுக்கு சக கால்பந்து வீரர்கள் மற்றும் நண்பர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, திங்களன்று அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் மனைவியை உயிருடன் மீட்டுள்ளதாகவும், இறுதி வரையில் போராடியும் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.