;
Athirady Tamil News

ரஷ்யாவுடன் இணையப் போகும் மற்றுமொரு நாடு – உக்ரைனுக்கு புதிய தலையி்டி !!

0

உக்ரைன், தமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில், ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்க நேரிடும் என பெலாரஸ் அதிபர் அலெக்ஸசாண்டர் லூகசென்கோ எச்சரித்துள்ளார்.

பெலாரஸ்மீது ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில் பதில் நடவடிக்கை மிகவும் கடுமையானதாக இருக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

பெலாரஸ் நாட்டின் எல்லைக்குள் உக்ரைன் படையினர் பிரவேசித்து மக்களை கொல்ல முயன்றதால், ரஷ்யாவுடன் இணைந்து போராட தயாராக உள்ளதாக பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூகசென்கோ கூறியுள்ளார்.

இது போரை முற்றிலும் மாறுபட்ட நிலைமைக்கு எடுத்துச் செல்லும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பெலாரஸ்சை ரஷ்ய இராணுவம் பயன்படுத்தியிருந்த நிலையில், அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

இதனிடையே உக்ரைன் மீதான ரஷ்யாவின் புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உக்ரைன் முழுவதும் 36 வரையான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ஆயுதப் படையின் பிரதானி கூறியுள்ளார்.

இவற்றில் 16 ஏவுகணைகளை உக்ரைனின் பாதுகாப்பு கட்டமைப்பு சுட்டுவீழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்தி என அனைத்து பகுதிகளையும் இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் எலி கோஹன் தலைநகர் கீயேவ்விற்கு விஜயம் செய்துள்ளார்.

போர்க் காலத்தில் உக்ரைனுக்கு விஜயம் செய்யும் இஸ்ரேலின் உயர்மட்ட பிரதிநிதியாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீயேவ்வில் இஸ்ரேலின் தூதரகத்தை மீளத் திறக்கும் நிகழ்விலும் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்றுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு இஸ்ரேல் கண்டனம் வெளியிட்டிருந்தாலும், உக்ரைனுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே இஸ்ரேல் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.